ADDED : ஆக 19, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; துாய்மைப் பணியை ஒப்பந்தம் விடுவதை தடுக்க வலியுறுத்தியும், சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை போலீஸ்துறை மூலம் ஒடுக்கிய தமிழக அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் சாராள், ராமர், மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.