ADDED : அக் 15, 2025 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி சிவக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகி விக்னேஷ்வரன் முன்னிலை வகித்தார்.