
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை கட்டட கழிப்பறைகள் செயல்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய கலெக்டர் அலுவலகம் திறந்தும் பிரச்னைகள் தீரவில்லை என கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார். கிளை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.