UPDATED : ஜூன் 16, 2026 04:58 PM
ADDED : ஜூன் 16, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர், தெருக்கள் தோறும் தூய்மை பணி, உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மா. கம்யூ., சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில செயற்குழு நிர்வாகி அர்ஜுனன், மாவட்ட செயலாளர் குருசாமி, மாவட்ட குழு நிர்வாகி திருமலை, கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
