ADDED : ஜூலை 28, 2026 02:07 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஅனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆரோக்கியராஜ் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சுப்புராஜ், குமரேசன், ரேணுகாதேவி, சரவணன், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
