sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

/

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


ADDED : ஏப் 05, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகளவு காணப்பட்டதால் நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி நேற்று முன்தினம் பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு மேல் 10:00 மணி வரை மலையில் பெய்த கனமழையினால் கோயிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகளவு காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். ஆனால் ஓடைகளில் அதிகளவு நீர்வரத்து இருப்பதால் அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் அடிவாரத்தில் நின்று கோயிலை நோக்கி சூடமேற்றி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து தினமும் காலையில் ஓடைகளில் வரும் நீர் வரத்தைப் பொறுத்தே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us