/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா?
/
நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா?
நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா?
நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா?
ADDED : ஜன 29, 2025 07:55 PM
விருதுநகர்:வரி வசூலை விரைந்து செய்ய கமிஷனர் திட்டியதால், வருவாய் ஆய்வாளருக்கு மயக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
.வரி வசூலில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. அதன் அருகேயுள்ள ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது.
இந்த நிதியாண்டில், 'விருதுநகர் மாவட்டத்தையே மாநில அளவில் முதலிடத்தில் கொண்டு வர வேண்டும்' என நகராட்சி கமிஷனர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் நகராட்சியிலும் முழுமையான வரி வசூல் செய்ய திட்டமிடப்பட்டது. நகராட்சி கமிஷனர் சுகந்தி, வருவாய் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், 40, என்பவரிடம், 'வரி வசூல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என திட்டியதால், அலுவலக வளாகத்தில் நேற்று முன் தினம் காலை மயங்கி விழுந்தார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தக் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சிவகாசியில் இருந்து தினமும் பணிக்கு வரும் சரவணன், இத்தகவலை மறுத்துள்ளதுடன், நேற்று முன் தினம் காலை வரும் போது அதிக பனி மூட்டமாக இருந்ததாகவும், தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், காலையில் உணவு உட்கொள்ளாமலும், மாத்திரை எடுத்துக ்கொள்ளாததாலும் மயக்கம் ஏற்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
கமிஷனர் சுகந்தி கூறுகையில், ''சிவகாசியில் முன்பு பணியில் இருக்கும் போதே, சரவணன் இரு முறை மயக்கமடைந்துள்ளார்,'' என்றார்.

