sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செயல்பாட்டிற்கு வந்த டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்

/

செயல்பாட்டிற்கு வந்த டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்

செயல்பாட்டிற்கு வந்த டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்

செயல்பாட்டிற்கு வந்த டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்


ADDED : ஜன 26, 2025 04:41 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கிராமங்கள் தோறும் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவதற்காக சி.எஸ்.சி., அகாடமி மூலம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 200 கிராமங்களில் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனங்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் கடந்த ஒரு மாதமாக கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அருப்புக்கோட்டையிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜன. 21ல் செய்தி வெளியானது. இதையடுத்து டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.






      Dinamalar
      Follow us