/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓய்வூதியர்களுக்கு வீடுதேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
/
ஓய்வூதியர்களுக்கு வீடுதேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
ஓய்வூதியர்களுக்கு வீடுதேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
ஓய்வூதியர்களுக்கு வீடுதேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
ADDED : நவ 12, 2025 11:57 PM
விருதுநகர்: விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு வீட்டில் இருந்த படியே தங்கள் உயிர்வாழ் சான்றை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியர்கள் வீடுகளில் இருந்தே பயோமெட்ரிக், முக அங்கீகார முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம். இதற்காக சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் பெறப்படும்.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ., எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க முடியும், என்றார்.

