sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி. ரூ.48 லட்சத்தில் பிரமடை ஓடை புனரமைக்கும் பணி துவக்கம்

/

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி. ரூ.48 லட்சத்தில் பிரமடை ஓடை புனரமைக்கும் பணி துவக்கம்

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி. ரூ.48 லட்சத்தில் பிரமடை ஓடை புனரமைக்கும் பணி துவக்கம்

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி. ரூ.48 லட்சத்தில் பிரமடை ஓடை புனரமைக்கும் பணி துவக்கம்


ADDED : டிச 01, 2024 04:28 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள பிரமடை ஓடை தூர் வார தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து ரூ. 48 லட்சம் நிதியில் புனரமைக்கப்படும் பணி நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான பிரமடை ஓடை திருச்சுழி ரோடு அருகில் உள்ளது. முன்பு, இதில் மழைநீர் நிறைந்து கோயிலின் தெப்பத்தில் வந்து சேரும்.

நாளடைவில் ஓடை பராமரிப்பு இன்றி கழிவு நீர் சேர்ந்தும், முட்புதர்கள் வளர்த்தும், குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தியாக வெளியானது.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் ஓடையை தூர் வாரி பராமரிக்க இந்து சமய அறநிலைய துறையிடம் அனுமதி பெற்றது.

பின் ரூ. 48 லட்சம் நிதியை ஒதுக்கி, ஓடையை சுற்றி கரை கட்டி, பென்சிங் அமைத்து, பூக் கற்களால் நடைபாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி: பிரமடை ஓடையை நகராட்சி நிதி மூலம் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையை சுற்றி நடைபாதை அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மக்கள் வாக்கிங் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளது.

ஓடையில் சுத்தமான மழை நீர் மட்டும் சேரும் வகையில் பணி செய்யப்படுகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.






      Dinamalar
      Follow us