ADDED : பிப் 16, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில்மாவட்ட நிர்வாகம், பொதுத்துறை, தனியார் வங்கிகள் இணைந்து நடத்திய சிறப்பு கல்வி கடன் முகாம்களில் 61 மாணவர்களுக்கு ரூ.3.51 கோடிக்கு கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கலெக்டர் ஜெயசீலன் விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த 35 மாணவர்களுக்கு ரூ.1.90 கோடிக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். மாவட்டத்தில் 2023-24 நிதியாண்டில் 2705 மாணவர்களுக்கு ரூ.56.57 கோடி மதிப்பில் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், அனைத்து வங்கி மேலாளர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.