sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

/

ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்


ADDED : ஆக 07, 2025 11:16 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் ஆக. 11ல் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

பொதுவாக குழந்தைகளுக்கு குடற் புழுக்கள் ஏற்பட்டால் ஊட்டசத்து குறைபாடு, ரத்தச்சோகை, உடற்சோர்வு, உடல், அறிவுத்திறன் மேம்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

நடப்பாண்டு ஒன்று முதல் இரண்டு வயதுடைய 7 ஆயிரம் குழந்தைகள், 2 முதல் 19 வயதுடைய 1.60 லட்சம் பேருக்கு என மொத்தம் ஒரு வயது முதல் 19 வயதுடைய 1.70 லட்சம் பேருக்கும், 20 முதல் 30 வயதுள்ள 5 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆக. 11ல் பள்ளிகள், கல்லுாரிகள், துணை, ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

இவற்றில் விடுபட்ட குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆக. 18ல் வழங்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us