ADDED : ஜன 18, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி லார்டு பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் மாவட்ட கேரம் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள் நடந்தது.
துவக்க விழாவில் மாவட்ட கேரம் அசோசியேசன் இணைச் செயலாளர் சரவணன் பிரகாஷ், உறுப்பினர் ஜான் பாஸ்கோ வரவேற்றனர். பள்ளி தாளாளர் ரவீந்திரன்துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முருகேசன் நடுவராக செயல்பட்டார். தொழிலதிபர் ஜெயராமன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் கோப்பையை வென்றனர்.