sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூட்டணியை காப்பாற்றுவதில் தான் தி.மு.க., அரசு கவனமாக உள்ளது-- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

/

கூட்டணியை காப்பாற்றுவதில் தான் தி.மு.க., அரசு கவனமாக உள்ளது-- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

கூட்டணியை காப்பாற்றுவதில் தான் தி.மு.க., அரசு கவனமாக உள்ளது-- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

கூட்டணியை காப்பாற்றுவதில் தான் தி.மு.க., அரசு கவனமாக உள்ளது-- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு


ADDED : டிச 09, 2024 04:57 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: தி.மு.க., அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் தான் கவனமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் விழிப்புணர்வு, டூவீலர் பேரணி, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: சிவகாசி அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தீக்காய சிகிச்சை பிரிவு செயலற்று உள்ளதால் பட்டாசு விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். தி.மு.க., அரசு வாங்கும் கடன் ஆக்க பூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறது.

தி.மு.க., அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் தான் கவனமாக உள்ளது. கூட்டணி பலத்துடன் 2026ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விடலாம் என கணக்கு போடுகிறது. அதன் தொண்டர்களே வெறுக்கும் வகையில் இந்த ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியமைக்க அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

பாசறை மாநில செயலாளர் பரமசிவம், எம்.எல்.ஏ., மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திர பிரபா, ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us