/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவி, மகனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி * டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
/
மனைவி, மகனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி * டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
மனைவி, மகனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி * டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
மனைவி, மகனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி * டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : டிச 28, 2024 01:21 AM
ஸ்ரீவில்லிபுத்தூர: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் குடும்பத்தகராறில் மனைவி, மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அக்குபஞ்சர் டாக்டர் முகமது முஸ்தபாவுக்கு 40, பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிதா 27. இவரும் மதுரையைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் முகமது முஸ்தபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காரியாபட்டி எழில்நகரில் வசித்து வந்தனர். குடும்பப் பிரச்னை காரணமாக இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
2018 மே 20 இரவு ஏற்பட்ட தகராறில் முகமது முஸ்தாபா மனைவி கவிதா, மூன்றரை வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். அவரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. முகமது முஸ்தபாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

