sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி

/

எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி

எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி

எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி


ADDED : மார் 05, 2024 06:08 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா, என விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

போதை பொருட்கள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து விருதுநகர் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்றே்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் இன்று எங்கு பார்த்தாலும் போதை பொருள். ரூ.2 ஆயிரம் கோடிக்கு போதை பொருள் பிடிபட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்டவர் தி.மு.க.,வின் அயலக செயலாளராக பதவி வகிக்க கூடிய ஜாபர். இவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போதை பொருளை பயன்படுத்தி மாணவர் சமுதாயத்தை, இளைஞர்களை சீரழிக்கின்ற இந்த ஆட்சியை கண்டிக்கிறோம்.

பாரபட்சமில்லாமல் போதை பொருள் சப்ளையில் உடந்தையாக இருந்தவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகமெங்கும் கிராமங்களிலே கஞ்சா, அபின் கிடைக்கிறது. என்னென்ன பெயரிலோ போதை பொருட்களை சொல்கின்றனர். இதற்கு காரணம் ஆட்சி நடத்த திராணியற்ற தி.மு.க., அரசு. ஆட்சி அதிகாரத்தை வைத்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்.

உழைக்கும் தி.மு.க., கட்சியினரையும் மதிப்பதில்லை. எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். திறனற்ற இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற செய்ய வேண்டும். லோக்சபாவில் குரல் ஓங்கி ஒலித்தால் தான் காவிரி பிரச்னை, பாலாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழகத்தின் உரிமைகளுக்காக விட்டு கொடுக்காமல் போராடிய ஆட்சி அ.தி.மு.க., ஆட்சி தான், என்றார்.

மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன்,. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் , எம்.எல்.ஏ., மான்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us