ADDED : ஆக 05, 2025 06:46 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம் : ராஜபாளையம் சடை உடையார் சாஸ்தா கோயில் ஆடி கொடை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் இருந்து பால் குடங்கள், தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மூலவர் சடை உடையார் சாஸ்தா, சங்கிலி மாடசுவாமி பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
தீர்த்த அபிஷேகத்திற்கு பின் அலங்கார ,தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. மாலையில் பூஜைக்கு பின் அதிகாலை 12:00 மணியளவில் சுடலை மாடசுவாமிக்கு சிறப்பு படையல் சாமக்கொடை பூஜை நடந்தன.
