sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூமாபட்டியில் டிரைவர் வெட்டிக்கொலை

/

கூமாபட்டியில் டிரைவர் வெட்டிக்கொலை

கூமாபட்டியில் டிரைவர் வெட்டிக்கொலை

கூமாபட்டியில் டிரைவர் வெட்டிக்கொலை


ADDED : அக் 01, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் 26, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, ராமசாமியாபுரத்தில் பஸ் மறியல் நடந்ததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூமாப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 26, லோடு ஆட்டோ டிரைவர், திருமணமானவர். நேற்று மாலை 5:00 மணிக்கு கூமாப்பட்டி ஊரணி தெரு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கூமாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமசாமியாபுரத்தில் பஸ் மறியல் நடந்தது.

இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விருதுநகர் எஸ்.பி. கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா சம்பவப் பகுதியை பார்வையிட்டு விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us