ADDED : ஜூலை 12, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் சூரங்குடியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 34. டிப்பர் லாரி டிரைவர்.
நேற்றுமுன்தினம் காலை 8:20 மணிக்கு கரிசல் பட்டியில் இருந்து கிராவல் மண் ஏற்றிக்கொண்டு முத்தாண்டியாபுரம் நோக்கி சென்றார். காலை 9:00 மணிக்கு டிப்பர் லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. செல்லப்பாண்டி லாரிக்கு அடியில் சிக்கி பலியானார்.
ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.