ADDED : மார் 04, 2024 04:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 5 வயது வரை உடைய ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 967 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பாக போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர்புறம், கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று நடந்தது. விருதுநகரில் 518 முகாம்கள் மூலம் 5 வயதுடைய 48,394 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 46,887 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.
சிவகாசியில் 619 முகாம்கள் மூலம் 5 வயதுடைய 83,854 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 82,080 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 1137 முகாம்கள் மூலம் 1,28,967 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 97.5 சதவிகிதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

