ADDED : ஆக 09, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சங்கர சேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராதா வரவேற்றார். துறை தலைவர் ஜாக்குலின் பெரியநாயகம் சிறப் புரையாற்றினார். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., சீனிவாசன் கலந்துகொண்டு போதையினால் ஏற்படும் தீமைகள், போதை ஒழிப்பு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி கூறினர். ஏற்பாடுகளை கல்லூரியின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழு செய்தனர்.