ADDED : நவ 01, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்களில் பூஜை நடக்கும் நேரங்களில் மேளங்கள் ஒலிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தலைமையில் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாளிடம் மனு அளித்துள்ளார்.
அப்போது பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா, மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதி தலைவர் தன்ராஜ், நகர செயலாளர் திருமலை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

