ADDED : ஜூலை 21, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: மதுரையை சேர்ந்தவர் கலையரசன் 20. வேனில் சுசீந்திரம் சென்றார்.
நேற்று முன் தினம் காலை 8:00 மணிக்கு சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகில் சென்றபோது வேனிற்கு முன்னால் கம்புகள் ஏற்றி சென்ற லோடு ஆட்டோ திடீர் என பிரேக் போட்டதில் பின்னால் வந்த வேன் மோதியது.
வேனில் வந்த ஏழாயிரம் பண்ணை பாலசுப்பிரமணியன் 70. இவர் மனைவி சேதுலட்சுமி, 67, ஆகியோர் காயம் அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாலுகா போலீசார் லோடு ஆட்டோ டிரைவர் தென்காசி கருப்பசாமி30, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

