/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்
/
தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்
ADDED : ஜன 24, 2026 06:18 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலையடிவார தோப்புகளில் புகுந்து யானைகள் தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்துவதால் விவ சாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி களான திருவண்ணாமலை, பந்தபாறை, வெங்கடேஷ்வராபுரம், தொட்டியபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள தோப்பு களில் கடந்த சில நாட் களாக மூன்று யானைகள் மாலை நேரங்களில் வந்து செல்கிறது. அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
நேற்று முன்தினம் மாலை திருப்பதி, கோவிந்தராஜ், பால்ராஜ் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
மலையடிவாரப் பகுதிகளில் அடிக்கடி யானைகள் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையில் போதிய அளவிற்கு ஊழியர்கள் இல்லை. உடனடியாக கூடுதல் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.
யானைகளை முழு அளவில் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

