sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம்

/

செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம்

செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம்

செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம்


ADDED : செப் 30, 2024 04:26 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் தினமும் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக செண்பகத் தோப்பு மலையடிவார தோப்புகளையும் கடந்து மம்சாபுரம் கண்மாய் பகுதிகள் வரை யானைகள் வந்து, தோப்புகளை சேதப்படுத்தியது. இதனையடுத்து வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

ஆனாலும் நேற்று முன்தினம் வரை யானைகள் தோப்புகளில் புகுந்து மா, தென்னை வாழை மரங்களை சேதப்படுத்தின.

வனத்திற்குள் யானைகளை விரட்டுவதும், யானைகள் திரும்பி வருவதும் தொடர்ந்து நீடிப்பதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் செண்பகத்தோப்பு, ராக்காச்சியம்மன் கோயில், அத்திதுண்டு பகுதி விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us