UPDATED : செப் 09, 2026 03:52 PM
ADDED : செப் 09, 2026 03:40 PM
விருதுநகர்: விருதுநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ..2.16 லட்சத்தில் உதவி உபகரஙணககள் வழங்கப்பட்டன. இதில் உதவி உபகரணங்கள், சுய தொழில் துவங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 க்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய கலெக்டர் சுகபுத்ரா அறிவுறுத்தினார். நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
