sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாரியத்தில் பதிய வடமாநில தொழிலாளர்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு

/

வாரியத்தில் பதிய வடமாநில தொழிலாளர்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு

வாரியத்தில் பதிய வடமாநில தொழிலாளர்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு

வாரியத்தில் பதிய வடமாநில தொழிலாளர்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு


ADDED : ஜன 23, 2025 03:46 AM

Google News

ADDED : ஜன 23, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வாரியத்தில் பதிந்த வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது. இதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து விருதநகர் மாவட்டத்திற்கு வந்து பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்குள் பணிபுரியும் இடத்திலேயே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் இணையதளம் www.tnuwwb.tn.gov.inல் பதிவு செய்ய விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையரால் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 162 பேருக்கு பதியப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் இதில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

அவர்களை பணிக்கு அமர்த்தும் தொழிலாளர் கட்டுமான நிறுவனத்தினர், அவர்களது ஆதார் உள்ளிட்ட விவரங்களை முறையாக சேகரித்து வழங்க வேண்டும்.

தொழிலாளியின் பிறந்த தேதிக்கான ஆவணம், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க கட்டுமான பணி செய்யும் நிறுவனங்கள், உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் தற்போதைய அலைபேசி எண் இணைக்கப்படாமல் இருந்தால் அதை இணைத்து வைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us