sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த குடியிருப்புகள் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

/

சேதமடைந்த குடியிருப்புகள் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சேதமடைந்த குடியிருப்புகள் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சேதமடைந்த குடியிருப்புகள் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 26, 2025 03:23 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்த குடியிருப்பு கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டப்பட்டது. நாளடைவில் பயன்பாட்டில் இல்லாமல் கட்டடங்கள் சேதமடைந்து விட்டது. தற்போது இங்குள்ள அனைத்து கட்டிடங்களும் சேதமடைந்து இடிந்துள்ளது. கட்டடங்களைச் சுற்றிலும் முட்புதர்களும் அடர்ந்துள்ளது. இதில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்களின் இருப்பிடமாக பயன்படுத்துகின்றது. இவைகள் அலுவலக வளாகத்தில் நடமாடி அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஊராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஒரு சிலர் இடிந்த கட்டடங்களின் அருகே காத்திருக்கின்றனர். மக்கள் நடமாடும் போதும் கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us