sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் கிராமங்களில் சேதமடைந்த சிறுவர் பூங்காக்களை சீரமைக்க எதிர்பார்ப்பு

/

சாத்துார் கிராமங்களில் சேதமடைந்த சிறுவர் பூங்காக்களை சீரமைக்க எதிர்பார்ப்பு

சாத்துார் கிராமங்களில் சேதமடைந்த சிறுவர் பூங்காக்களை சீரமைக்க எதிர்பார்ப்பு

சாத்துார் கிராமங்களில் சேதமடைந்த சிறுவர் பூங்காக்களை சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 27, 2025 07:14 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார்ஊராட்சி ஒன்றிய் கிராமங்களில் சேதமடைந்த நிலையில் உள்ள சிறுவர் பூங்காக்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த காலங்களில் சிறுவர்கள் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக ஊராட்சிகள் தோறும் சிறுவர் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தப் பூங்காக்களில் சீசா,ஊஞ்சல்,சறுக்கு மேடை,சதுரங்க பார் கம்பி, ராட்டினங்கள் என பல்வேறு விளையாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது. காலப்போக்கில் இந்த பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் உபகரணங்கள் சேதமடைந்து உடைந்து விட்டன.

தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது .பள்ளிகளும் விடுமுறை விட துவங்கி உள்ளன.இந்த நிலையில் ஊராட்சிகளில் பொழுதுபோக்கு இடங்களாக இருந்த சிறுவர் பூங்காக்களில் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடி மகிழ இடமின்றி அவதிப்படும் நிலை உள்ளது.

சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் ஊராட்சிகள் தோறும் சேதமடைந்த நிலையில் உள்ள சிறுவர் பூங்காக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us