நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம், சங்கர கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
தலைவர் முருகதாசன் தலைமை வகித்தார். பட்டய தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். உடனடித் தலைவர் ரங்கராஜ் வரவேற்றார். டாக்டர் அனுராதா தலைமையிலான மருத்துவ குழுவினர் 75 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் கணேசன் செய்திருந்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.