sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் படி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்  தாமதமாவதால் பாதிப்பு 

/

பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் படி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்  தாமதமாவதால் பாதிப்பு 

பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் படி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்  தாமதமாவதால் பாதிப்பு 

பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் படி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்  தாமதமாவதால் பாதிப்பு 


ADDED : மார் 27, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 27, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்றதாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 2021 பிப். 12ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் 27 பேர் பலியாகினர். இதில் 26பேர் வரை காயமடைந்தனர்.

இவர்களுக்கு 2022ல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு சதவீதங்களுக்கு ஏற்ப ரூ.2 முதல் 15 லட்சம் வரைவழங்க உத்தரவிட்டது.

இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதில் 10 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும். மீதம் 80 சதவீதத்தை பட்டாசு ஆலை உரிமையாளர் வழங்க வேண்டும்.

இதற்கு பொறுப்பு தலைமை செயலாளர். மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டர் மூலமாக வழங்க வேண்டும்.

மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு சரியான வாரிசுதாரர்களுக்கு போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறாக தீர்ப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

2021க்கு பிறகும் நிறைய விபத்துக்கள் நடந்து விட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு படி இன்னும் இழப்பீடு வழங்கப்படாமல் அரசு தாமதித்து வருகிறது. இதனால் வாரிசுதாரர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமும் தரப்பில் கூறுகையில், அரசு தரப்பில் வழங்க வேண்டிய நிவாரணம் 15 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.மீதி ஆலை நிர்வாக தரப்பு தான் தர வேண்டும்.

உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்தது.






      Dinamalar
      Follow us