sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்

/

போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்

போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்

போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிரில் புழுக்கள் வேதனையில் விவசாயிகள்


ADDED : டிச 09, 2024 05:01 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் போதுமான மழை இல்லாததால் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களில் புழுக்கள் பயிர்களை தின்பதால் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

அருப்புக்கோட்டையில் விருதுநகர் ரோடு, புளியம்பட்டி பகுதிகளில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் பருத்தி, சோளம் உட்பட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பயிர்கள் நன்கு விளைந்த நிலையில், தற்போது தற்போது மழை தேவையாக உள்ளது. மற்ற ஊர்களில் பெய்யும் கனமழை அருப்புக்கோட்டை பகுதிகளில் மட்டும் சாரல் மழையாகவும், குறைவாக பெய்ததால் விவசாயத்திற்கு பயனற்றதாக உள்ளது.

கனமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கும் நிலையில், வளர்த்துள்ள மக்காசோள பயிர்களில் புழுக்கள் வந்து பயிரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று வருகின்றன. இந்த நேரத்தில் மழை பெய்தால் பயிர்களில் உள்ள புழுக்கள் உதிர்ந்து விடும். மழை பொய்த்து போனதால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.

விவசாயிகள் கூறுகையில்: கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். மான்கள், காட்டுப்பன்றிகள், வெட்டிக் கிளிகள் இவற்றில் இருந்து பயிர்களை காப்பாற்றி கொண்டு வருவதற்குள் மழை இல்லாமல் போனதால், பயிர்களை புழுக்கள் தாக்கி அழிக்கின்றன என, வேதனையோடு புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us