sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு

/

 நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு

 நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு

 நாய்களால் 10 நாளில் 22 ஆடுகள் பலி இழப்பீடு வழங்க வளர்ப்போர் எதிர்பார்ப்பு


ADDED : டிச 30, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங் கொண்டானில் 10 நாளில் 22 ஆடுகள் நாய்களின் வேட்டைக்கு பலியானதால் ஆடு வளர்ப்போர் கடும் மனவேதனைக்குள்ளாகி வருகின்றனர். அரசு நாய்களை கட்டுப்படுத்தவும் இழப்பீடு வழங்கவும் எதிர்பார்க்கின்றனர்.

ஜமீன் கொல்லங் கொண்டான் பஸ் ஸ்டாப் அருகே புது குடியிருப்பு பகுதியில் 40 பேர் ஆடு வளர்ப்பை முழு தொழிலிலாக ஈடுபட்டுள்ளனர். பகலில் மேய்ச்சலுக்கு விட்டு இரவில் தொழுவத்தில் பாதுகாப்பாக அடைத்து வைப்பர். 10 நாட்களுக்கு முன் பாண்டியராஜ் தொழுவத்தில் புகுந்த நாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. நேற்று முன்தினம் பாண்டி என்பவரது தொழுவத்தில் புகுந்த நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழந்தன.

இந்நிலையில் நேற்று கந்தசாமி, பாண்டி ஆகியோரது தொழுவத்தில் இருந்த நான்கு ஆடுகளை கடித்த நாய்கள் ஆட்டு குட்டியை துாக்கிச் சென்றது. 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

கடந்த 10 நாட்களில் நாய்கள் கடித்து 22 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us