/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு, விதை மானியம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு, விதை மானியம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு, விதை மானியம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிறுதானிய பயிர்களுக்கும் கடன், காப்பீடு, விதை மானியம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 12, 2025 11:36 PM

விருதுநகர் : தமிழகத்தில் சிறுதானிய பயிர்களுக்கும் பிணையில்லா கடன், பயிர்க்காப்பீடு, விதை மானியம் போன்ற சலுகைகள் அளித்தால் தான் அவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த முடியும், அதை விடுத்து சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவதால் பயனில்லை என விவசாயிகள் கூறினர்.
தமிழகத்தில் 2023ல் ஐந்தாண்டு கால சிறுதானிய இயக்கம் அமலானது. ஐ.நா., உலக அமைப்பு, 2023ஆம் ஆண்டை அனைத்துலக சிறுதானிய ஆண்டாக அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தமிழகத்தில் ஐந்தாண்டு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆண்டுதோறும் சிறுதானிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சாகுபடி பரப்பு 63 லட்சத்து 48 ஆயிரம் எக்டேராக உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் தரிசு நிலங்களைச் சீரமைத்து 50 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடியை செய்ய திட்டமிட்டு, விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டது. சாகுபடி பரப்பு அதிகரிப்பை ஊக்குவித்தல் போன்றவை முக்கிய நோக்கங்களாக இருந்தன.
ஆனால் சிறுதானிய திருவிழாக்களால் பயனில்லை என்கின்றனர் விவசாயிகள். அவர்கள் கூறியதாவது: கேழ்வரகு, திணை, வரகு, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் வறட்சி காலங்களில், சாதாரண மண்ணிலும் நன்கு வளரக்கூடியவை. இந்த பயிர்களை அறுவடை செய்வது மிக கடினம். வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்க வேண்டும்.
மற்ற பயிர்களை போல இதற்கும் பிணையில்லா கடன், விதை மானியம் போன்றவை வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றை செய்யாமல் சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றனர்.