ADDED : செப் 04, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் வருவாய் கோட்டங்களில் செப். 9 காலை 11:00 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் சிவகாசி சப் கலெக்டர், சாத்துார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது
. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய மக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை ஆர்.டி.ஓ.,க்களிடம் நேரடியாக மனு அளித்து வட்டார அளவிலான விவசாயம், விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் நடவடிக்கை விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.