sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இயற்கை உரத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

/

இயற்கை உரத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

இயற்கை உரத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

இயற்கை உரத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


ADDED : அக் 11, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 11, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி விவசாயிகள் கால மாற்றம் ஏற்பட்டாலும் ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரத்திற்காக தக்கை பூண்டு செடி வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களான ரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நிலங்களில் மண்ணின் தன்மை மாறி பயிர்களில் வளர்ச்சி, பூச்சிகளின் தாக்குதல் போன்ற பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து முடிந்த அளவில் விவசாய நிலங்களில் தக்கை பூண்டு விதைகளை துாவி வளர்த்து வருகின்றனர். ராஜபாளையம், சேத்துார், தேவதானம் பகுதி கண்மாய் ஒட்டிய நன்செய் நிலங்களில் நெல் சாகுபடிக்கு முந்தைய இரண்டு மாதங்களில் நிலங்களை தயார் படுத்தும் முன் தக்கை பூண்டை வளர்க்கின்றனர். நன்கு வளர்ந்த நிலையில் ரொட்டேட்டர் மூலம் உழுது உரமாக பயன்படுத்துவதால் வேருக்கு நைட்ரஜன் புட்டின் சத்து நேரடியாக கிடைக்கிறது.

ரசாயன உரத்தினால் மண் புழுக்கள் இறக்கும் நிலை மாறுவதுடன் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. சுலபமான பணியாகவும் மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் வாய்ப்பாக உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் இதில் ஈடுபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us