ADDED : ஜூலை 28, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் :  தாயில்பட்டியில் உழவர் நலத்திட்ட முகாம் நடந்தது.
வேளாண் துறை துணை இயக்குனர் லதா தலைமை வகித்தார். உதவி இயக்குனர் முத்தையா முன்னிலை வகித்தார். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை சார்பில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அவரை துவரை காராமணி பயறு வகை தொகுப்பு அடங்கிய தலா 25 கிராம் விதை இலவசமாக  வழங்கப்பட்டது.

