sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது

/

போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது

போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது

போதையில் மகன் தகராறு கொன்ற தந்தை கைது


ADDED : அக் 02, 2024 02:05 AM

Google News

ADDED : அக் 02, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் பொம்மயநாயக்கர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் ராமசாமி, 74. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் ராணி, 65. இவர்களுக்கு மகன்கள் வெங்கட்ராமன், 44, சுப்பிரமணி, 34, மகள் சுப்புலட்சுமி, 40, உள்ளனர்.

வெங்கட்ராமன், சுப்புலட்சுமி திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். சுப்பிரமணிக்கு திருமணமாகாத நிலையில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, குடிபோதையில் தகராறு செய்ததால் மகன் சுப்பிரமணியை, ராமசாமி அடித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினார்.

போலீசார் கூறியதாவது:

மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, பெற்றோரிடம் மகன் சுப்பிரமணி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும், அவர் தகராறு செய்தார். மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், துாங்கிய சுப்பிரமணியை கட்டை, அரிவாள் மனையால் தாக்கிக் கொலை செய்தார். அவரை கைது செய்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us