/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் போலீஸ், போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
பெண் போலீஸ், போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 25, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.
இது குறித்து கார்த்திகேயன் மனைவி, சில நாட்களுக்கு முன், ஊரகப்போலீசில் புகார் அளித்தார். அவரிடம் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார்.
நவ., 23ம் தேதி இரவு, 9:00 மணிக்கு விருதுநகர், சத்திரரெட்டியபட்டி போலீஸ் செக் போஸ்ட்டில் பணியில் இருந்த பெண் போலீசிடம் கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார்.
இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.

