/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடை நின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள செயல்பாடு
/
இடை நின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள செயல்பாடு
ADDED : பிப் 24, 2024 05:50 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும்பள்ளியில் சேர்க்கும் வகையில் சிறப்பு களச் செயல்பாடு இன்று(பிப். 24) அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது.
கலெக்டர், எஸ்.பி., டி.ஆர்.ஓ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்,துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், தாசில்தார்கள் உட்பட 80 அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கு தனித்தனியாக 10 முதல் 15 இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இம்மாணவர்களை ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க உள்ளனர். பள்ளி கல்வியில் நல்ல தேர்ச்சி சதவீதமுடைய மாவட்டத்தில், இடையிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்களின் இந்த கள செயல்பாட்டிற்கு, பெற்றோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும், என கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.

