/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அணிகலன் தயாரிப்பு கற்கள் அகழாய்வில் கண்டெடுப்பு
/
அணிகலன் தயாரிப்பு கற்கள் அகழாய்வில் கண்டெடுப்பு
ADDED : நவ 08, 2024 02:06 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட, 2400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கற்கள் அந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாட, கற்கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றார்.