ADDED : ஜூலை 03, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: -: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே ஓ. மேட்டுப்பட்டியில் சங்கையா மேச்சஸ் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று மாலை 6:30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.
தொழிலாளர்கள் யாரும் இல்லாத நிலையில் இரவு 7:15 மணிக்கு திடீரென தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் தீ பற்றியது. சாத்துார் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
