sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

/

சிவகாசியில் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசியில் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசியில் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு


ADDED : அக் 13, 2024 07:53 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில் இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றி இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகின்றது.

இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. காற்றில் ஈரப்பதம் கலந்தாலே பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படும். மழை பெய்து ஈரம் காயாத நிலையில் பட்டாசு உற்பத்திக்கு வழியில்லை.

வெயில் அடிக்காவிட்டால் பட்டாசுகளை காய வைக்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே உற்பத்தி சதவீதம் குறைந்த நிலையில் மழையால் மேலும் உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பட்டாசு பற்றாக்குறை ஏற்படும் நிலையுள்ளது. தீபாவளி நெருங்குவதால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் உற்பத்தி பாதிப்பால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us