ADDED : ஜூலை 02, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசி காக்கிவாடன்பட்டி கே.ஆர்.பி., கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி வரவேற்றார். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் வாழ்த்தினார். தமிழ்த்துறைத்தலைவர் மாரியப்பன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தாசில்தார் மாரிமுத்து பேசினார். தமிழ்த்துறை பேராசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.