/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கீழ அழகியநல்லுாரில் மீன்பிடி திருவிழா
/
கீழ அழகியநல்லுாரில் மீன்பிடி திருவிழா
ADDED : ஏப் 24, 2025 06:41 AM

காரியாபட்டி: காரியாபட்டி கீழஅழகியநல்லூரில் கரிசல் கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன. மக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனர்.
காரியாபட்டி கீழஅழகியநல்லூரில் கரிசல் கண்மாயில் மழை நீர் நிரம்பி இருந்தது. அக்கிராமத்து சார்பாக பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக தண்ணீரின் அளவு குறைந்தது. மீன்கள் வளர்ச்சி அடைந்து துள்ளி குதித்தன. மீன்பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்பட்டது.நேற்று காலை ஊர் பெரியவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அச்சங்குளம், மாந்தோப்பு, கெப்பிலிங்கம்பட்டி, மல்லாங்கிணர், வரலொட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். இதில் கெளுத்தி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. அதிகபட்ச எடையாக கடல் கெண்டை மீன் 5 முதல் 7 கிலோ வரை இருந்தது. ஒவ்வொருவருக்கும் தலா 5 முதல் 9 ஒரு கிலோ வரை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

