sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

/

இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை


ADDED : செப் 28, 2025 03:14 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே வில்லிபத்திரியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இரு லாரிகளில் கொண்டு வரப்பட்ட 55 டன் எள்ளை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகரில் உள்ள நிறுவனத்திற்கு நல்லெண்ணெய் தயாரிப்பதற்காக நேற்று மதியம் இரு லாரிகளில் 734 மூடைகளில் 55 ஆயிரத்து 50 கிலோ எள் கொண்டு வரப்பட்டது. வில்லிபத்திரியில் வைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் இரு லாரிகளையும் சோதனை செய்தனர். இரு லாரிகளுக்கும், அதன் நிறுவனத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் எள் லோடு ஏற்றி வந்திருப்பதையும், நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திற்கு எள் லோடு அனுப்பிய நிறுவனத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரு லாரிகளில் இருந்து எள் லோடு பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்காக எடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப்பொருட்களை போக்குவரத்து செய்த நிறுவனம், அந்த நிறுவனம் மூலமாக உணவுப்பொருட்களை வடமாநிலத்தில் இருந்து கொண்டு வந்த எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாரியப்பன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us