sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ

/

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ


ADDED : ஆக 20, 2025 03:00 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டது. அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து வருஷநாடு மலைப்பகுதி செல்லும் வனப்பகுதி பீட் 4 என்ற இடத்தில் ஆடி அமாவாசை அன்று தீப்பிடித்தது. வனத்துறையினர் அணைத்தனர்.ஆனாலும் வெயிலின் தாக்கத்தால் புகைமூட்டம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களிலும் அதிகாலை முதல் காட்டு தீ பற்றி எரிந்தது.

வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2:00 மணி முதல் மீண்டும் சாப்டூர் வனச்சரக பீட் 5 வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்தது. இதனை வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியில் இருந்தே மக்கள் பார்க்க முடிந்தது.

வத்திராயிருப்பு வனத்துறையினரின் 15 பேர் கொண்ட குழு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை நிலவும் சூழ்நிலையை பொறுத்தே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us