ADDED : பிப் 04, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ 1 கோடியே 95 லட்சம் மதிப்பிலான புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட சார்பதிவாளர், ஆர்.டி.ஓ. கனகராஜ், தாசில்தார் ராஜாமணி, மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

