/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு: ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
/
காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு: ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு: ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
காரில் வந்து பஸ்சில் நகை திருட்டு: ம.பி.,யைச் சேர்ந்த நால்வர் கைது
ADDED : ஆக 13, 2025 01:47 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து காரில் வந்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஹோட்டலில் நின்றிருந்த ஆம்னி பஸ்சில் ஏறி, பெண் பயணியின் கைப்பையில் இருந்த தங்க நகையை திருடிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பட்டமுத்து, 32, என்பவர், சென்னையில் வேலை பார்க்கிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், ஆக., 10 இரவில் சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் மனைவியுடன் பயணித்தார்.
இரவு, 8:50 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டு, பட்டமுத்து, மனைவி உட்பட பஸ்சில் இருந்த அனைவரும் இறங்கி சென்றனர். பின் வந்து பார்த்தபோது பட்டமுத்துவின் மனைவி கைப்பையில் வைத்திருந்த, 3.5 சவரன் தங்க நகைகளை காணவில்லை.
இதையடுத்து, நத்தம்பட்டி போலீசார் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மத்திய பிரதேச மாநில பதிவு எண் கொண்ட காரில், நான்கு பேர் ஏறிச் செல்வது தெரிந்தது.
மதுரையில் நின்றிருந்த அந்த காரில் இருந்த, ம.பி., மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் கான், 32, அக்ரம் கான் 26, மோலா, 36, அக்ரம் முல்தானி, 26, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், அழகாபுரி ஹோட்டலில் நின்றிருந்த பஸ்சில் ஏறி நகையை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களின் காரையும், 1.4 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பிற பகுதிகளில் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.