/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி
/
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி
ADDED : பிப் 04, 2025 04:47 AM
ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்துார் வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயமாலா 41, இவரிடம் கீழ ராஜகுல ராமன் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், சாந்தி தம்பதியினர் ராஜபாளையத்தில் துப்புரவு பணியாளர்களை கணக்கெடுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய ஜெயமாலாவிடம் 2024 அக். மாதம் ரூ.15 ஆயிரம், அவர் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம்., பெற்று ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளார். இதன் பின், 'வேலை கிடைத்துவிட்டது. உடனடியாக பணம் செலுத்த வேண்டும்,' என கூறி அவர் வைத்திருந்த 5 பவுன் நகைகளை பெற்று சவுத் இந்தியன் வங்கி மூலம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
4 மாதங்கள் கடந்தும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தர நடவடிக்கை இல்லாததாலும் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. ராஜபாளையம் தெற்கு போலீசார் ஆனந்த், சாந்தி இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

